-

மராயணம்

{[['']]}
சுயநலத்துடன்
வளர்த்தாலும்
பொதுநலத்துடன் தான்
வளர்கிறது மரம்

அறுக்கப்பட்டு செதுக்கப்பட்டு
அடுக்கப்பட்டு
பயணம் செய்வதைவிட
நின்ற இடத்தில்
நிற்பதொன்றும்
குறையில்லை மரங்களுக்கு

மக்கட் பண்பில்லா
மரங்களால்
நிரம்பி வழிகிறது
கான்கிரீட் வனம்
வளர்க்க வக்கற்ற வாழ்க்கை
வருடியாவது கொடு
இறந்த மரங்களை
வாசிக்கும்போதாவது
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com