-
mas template
Latest Poems

விடிவு

சுஜாதா
 
கண்ணை மூடி இருந்துவிட்டால்
காலையில் சூரியன் உதியானா?
மனதை நீதான் பூட்டிவிட்டால்
மனதில் நினைவும் மலராதா?
கதவைப் பூட்டி நீயிருந்தால்
காளையவன் தான் உடையானா?
காலம் நமக்கு வந்துவிட்டால்
கனவும் நனவா மாறாதா?

கோவில்

சுஜாதா
 
மக்களின் காணிக்கை
மாக்களின் வேடிக்கை
அரசனின் கோரிக்கை
ஆண்டியின் வாடிக்கை 

பெண்

சுஜாதா
 
பார்வைக்கு அழகானவள்
பண்பிற்குப் புதிரானவள்
பாசத்திற்குத் தாயானவள்
பணிவிற்கு நிகரானவள்

பாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம்


பாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம் கொண்டவனே தமிழா சாய்ந்து மண்ணில் கிடக்க நாம் என்னடா உக்கிய மரமா தேய்ந்து மூலையில் கிடக்க நாம் என்ன பழைய செருப்பா மாய்த்து வா பகையை ! எழுந்து பறை சாற்றி வா வெற்றியை.

நாமிருக்க நாடு இல்லை

Inthiran
 
ஆதவனால் வான் மதியும்
ஒளி மழையைப் பொழியுமே
சாதனையால் தமிழ்மொழியும்
கவிமழையில் நனையுமே
 
நாமிருக்க நாடு இல்லை
அதை எழுதிக் கிழிக்கவா
ஆம் அதற்குக் காரணம் யார்
எம்மவர் தான் பழிக்கவா ..!

மாவீரன் மடிவதில்லை


நாம் உறங்க தாம் விழித்து 
நமைக்காத்து உயிர்நீத்து
தாமுறங்கும் கல்லறையும் 
தகர்த்து எறியப்பட

தமிழர் நம் மனங்களில் குடிவாழும் 
தமிழ்த்தாய் பெற்றெடுத்த 
தன்னிகரில்லா தன்மான சின்னங்கள்

 உற்றவரும் உடன்பிறப்பும்  கண்மூடி தூங்குகையில்
சற்றும் தடையின்றி 
சுற்றிவரும் உங்கள் நினைவலைகள்

பற்றி எரியும் 
பெற்ற மனத்துயர்
மற்றவர்கள் யார் அறிவார்?

குற்றமிங்கு தமிழராக பிறந்ததென்று
குலை நடுங்கி குற்றுயிராய் செத்தொழியும் 
நிலை மாறி  
நீவீர் சிந்திய குருதியும்
விலையற்ற  தியாகமும் ஒருநாள் ஆளும்

கார்த்திகைப் பூக்கள்


சிந்திய இரத்தம்
செந்தூரம் பொங்கப்
பச்சைத் துரோகம்
பக்கத்திலிருக்க
வந்த கதிரொளி
வாராமல் போக மெல்ல
நொந்த கதை சொல்லும்
கார்த்திகைப் பூக்கள்

மரணமிப் பிரிவு.......!

ஹாசிம்
 
மழலை உன் சொற்களில்
மயங்குகின்றேன் கண்ணே... என்
மனதிற்குச் சுமையாய்
கனக்கிறது உன்வார்்தைகள்
 
விளையாட்டுக் காட்டிவிட்டு
விட்டுவிட்டுச்சென்றாய் என்று
அங்கலாய்பில் அழுகிறாய் நினைத்து
என்னுயிர் பிரிந்தது போல்
நானும் அழுகிறேனிங்கு
 
என் தடங்களைத் தடவிப்பார்த்து
தந்தை முகம் தேடுகிறாயென்று உன்
தாய் மொழியில் கேட்டு நான் தவிக்கின்றேன்
இத்தரணியில் நாம் பெற்றவரம் இதுதானோ.....
 
கடந்த பெருநாட்களைக் கடிந்து
என் வரவில் பெருநாள்க் காணக்
காத்திருக்கும் செல்லமே...
என் நிலைகொண்டு நொந்தழுகிறேன்
 
மரணம் எமை பிரித்திருந்தால்
மறந்திடுவாய் ஒரிரு நாட்களுக்குள்
தினம் தினம் மரணமிப் பிரிவால்
மகிழ்வின்றித் தவிக்கிறாய்....
 
எமைப்படைத்த இறைவனிடம் மாத்திரம்
இருகரமேந்தி நில் எம் போன்ற துயர்
இனியாருக்கும் கொடுத்திடாதே என்று
வல்லநாயன் வழிசெய்யட்டுமெம் வாழ்வுக்கு.....

பாழடைந்த வீடு..!

என் அவல நிலையை
சொல்லி அழ
எனக்கு நாவில்லையே
எனக்குள் ஏன் இந்த
மௌனக்கண்ணீர்
 
இறைவா நான் செய்த
பாவம் தான் என்ன
 
வாழையடி வாழையாயாக
எனக்குள் ராஐவாழ்கை
வாழ்ந்தவர்கள் எங்கே
 
சோபை இழந்த நிலையில்
என்னை ஊனமாக்கி
இடிபாட்டுக்குள் என்னை
நிறுத்தி விட்டனரே
 
வாழ்வின் சுவை ருசிக்கும் வரை
எனக்குள் உண்டு
உறங்கி வாழ்ந்தவர்கள்
கண்காணாத இடம் சென்றனரே
 
நான் வேண்டும் சுகம்
பூட்டிக் கிடக்கும்
கதவுக்குள் கிடைப்பதில்
அர்தமில்லையே
 
அரவங்களும் éச்சிகளின்
வாழ்விடமாகவே நான் இப்போது
இருக்கிறேன்
 
இந்த இன்னல் எனக்கு புதிதென்பதால்
இதயம் கரைகிகிறது
 
என்னை பதிதாக உருவாக்கியவர்
மூன்று தலைமுறைக்கு முன்னவர்
 
அவரோடு தொடர்ந்து வாழ்ந்தவர்களை
இமைகளின் ஓரத்தில் சுமக்கிறேன்
 
மீண்டும் அவர்களோடு
உயிர்க் கருவாய் அவர்களை
எனக்குள் சுமப்பதையே
விரும்பகிறேன்
 
இன் வெளிநாட்டில் வாழ்பவர்கள்
நாளை வாழ்விடம் தேடி வருவார்களேயானால்
நான் மீண்டும் மலர்ச்சி பெறுவேன்

மராயணம்

சுயநலத்துடன்
வளர்த்தாலும்
பொதுநலத்துடன் தான்
வளர்கிறது மரம்

அறுக்கப்பட்டு செதுக்கப்பட்டு
அடுக்கப்பட்டு
பயணம் செய்வதைவிட
நின்ற இடத்தில்
நிற்பதொன்றும்
குறையில்லை மரங்களுக்கு

மக்கட் பண்பில்லா
மரங்களால்
நிரம்பி வழிகிறது
கான்கிரீட் வனம்
வளர்க்க வக்கற்ற வாழ்க்கை
வருடியாவது கொடு
இறந்த மரங்களை
வாசிக்கும்போதாவது
 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com