-

முழுவதும் அவள்

{[['']]}
முழுவதும் அவள்
என் கவிதைப் படைப்புகளின் அரசியே 
உன்னை என் கவிதைகளால் அலங்கரிக்கவா... 

உன்னிலிருந்து வடிந்த கவிதை வரிகளை 
உன் மீது அள்ளி வீசவா... 

காற்றில் தவழும் உந்தன் கூந்தலை 
என் மீது அள்ளி போத்தவா... 

வாசம் வீசும் உன்னையே 
உன் பின்னால் தொடர்ந்து வரவா.. 

பூமியை தொடும் உன் பாதங்களை 
செருப்பென என் கைகளில் தாங்கிக்கொள்ளவா... 

நீயே என் முழுவதும் என வாழ்கிறேன் என் கவிதையே 
என்னையே முழுவதுமாய் உன்னிடம் பரிசளிக்கவா...
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com